தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 12/2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (கீறியது)
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை ஆதியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறியதும் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, முதலில் 1/4 கப் நீரை ஊற்றி 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில் குறைந்த தீயில் வேகவிட வேண்டும்.
ஓட்ஸ் நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லியைத் தூவி கிளறினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஓட்ஸ் உப்புமா தயார்.
0 comments :
Post a Comment